தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும்

 தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 21–ந் தேதி மலேசியா சென்றிருந்தார். இந்த பயணத்தின் இறுதி நாளன்று அந்த நாட்டு பிரதமர் நஜிப்ரசாக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார்.

கோலாலம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் நிர்வாக தலை நகரும், தோட்ட நகருமான புத்ரஜயாவில் இந்த சந்திப்பு நடந்தது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

அப்போது தீவிரவாத சவால்கள் மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் பாரம் பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இருநாடுகளும் பகிர்வது என ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஜனநாயகம், பன்மைத் தன்மை மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பும் உறுதி செய்யப் பட்டது.

பின்னர் இருநாடுகளுக்கு இடையே சைபர்பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம், திட்டம் மற்றும் செயலாக்கல் துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பின் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


தீவிரவாதம், உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடந்துவரும் எல்லையற்ற தாக்குதல்களும், தீவிரவாதத்தின் உலகளாவிய இயற்கையை நினைவூட்டுகிறது.

மதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான எந்த பிணைபையும் நிராகரித்து இஸ்லாமின் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்திவரும் பிரதமர் நஜிப் ரசாக்கை வாழ்த்துகிறேன். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அவரது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.

நமது பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் இரு நாட்டு பகிர்வு அர்ப்பணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தபாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உங்களுக்கு தனிப் பட்ட முறையில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த துறையில் நமது ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தை பொறுத்த வரை, கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.


சைபர்பாதுகாப்பு துறையில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமதுவாழ்வு பல்வேறு வலைப்பின்னல்களை கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை மேம்படுத்த முடியும் என்ற பிரதமர் நஜிப்பின் நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமின்றி இருதரப்பு ஒத்துழைப்பையும் புதிய மட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்புகிறேன்.


இந்தியாவின் சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பங்களிப்பை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.

இதைப் போல மலேசியாவின் ரெயில்வே கட்டுமானத்துறையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை ஆற்றுகின்றன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் சிறந்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இதற்காக நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவின் பொருளாதார திட்ட அமைப்பான ‘பிமாண்டு’வுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனுடன் எங்கள் நிதிஆயோக் அமைப்பும் இணைந்து செயல்பட கேட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப்ரசாக், பாதுகாப்பு துறையில் இருதரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இருநாடுகளும் விரும்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதில், ‘அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்கிறோம். இந்தவிவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...