தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும்

 தீவிரவாதிகளை உலக நாடுகள் நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என இந்தியாவும், மலேசியாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 21–ந் தேதி மலேசியா சென்றிருந்தார். இந்த பயணத்தின் இறுதி நாளன்று அந்த நாட்டு பிரதமர் நஜிப்ரசாக்குடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார்.

கோலாலம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் நிர்வாக தலை நகரும், தோட்ட நகருமான புத்ரஜயாவில் இந்த சந்திப்பு நடந்தது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

அப்போது தீவிரவாத சவால்கள் மட்டுமின்றி பாரம்பரியம் மற்றும் பாரம் பரியமற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இருநாடுகளும் பகிர்வது என ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஜனநாயகம், பன்மைத் தன்மை மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பும் உறுதி செய்யப் பட்டது.

பின்னர் இருநாடுகளுக்கு இடையே சைபர்பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம், திட்டம் மற்றும் செயலாக்கல் துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பின் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


தீவிரவாதம், உலகிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. பல்வேறு நாடுகளில் சமீப காலமாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது நடந்துவரும் எல்லையற்ற தாக்குதல்களும், தீவிரவாதத்தின் உலகளாவிய இயற்கையை நினைவூட்டுகிறது.

மதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடையிலான எந்த பிணைபையும் நிராகரித்து இஸ்லாமின் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்திவரும் பிரதமர் நஜிப் ரசாக்கை வாழ்த்துகிறேன். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அவரது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகிறேன்.

நமது பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதில் இரு நாட்டு பகிர்வு அர்ப்பணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தபாதுகாப்பு ஒத்துழைப்புக்காக உங்களுக்கு தனிப் பட்ட முறையில் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். இந்த துறையில் நமது ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தை பொறுத்த வரை, கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.


சைபர்பாதுகாப்பு துறையில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமதுவாழ்வு பல்வேறு வலைப்பின்னல்களை கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு உறவுகளை மேம்படுத்த முடியும் என்ற பிரதமர் நஜிப்பின் நம்பிக்கையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். அதுமட்டுமின்றி இருதரப்பு ஒத்துழைப்பையும் புதிய மட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என நம்புகிறேன்.


இந்தியாவின் சாலைவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளில் மலேசியாவின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பங்களிப்பை ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டங்களிலும் எதிர்பார்க்கிறேன்.

இதைப் போல மலேசியாவின் ரெயில்வே கட்டுமானத்துறையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பங்களிப்பை ஆற்றுகின்றன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பொது நிர்வாகம் மற்றும் ஆளுமையில் சிறந்த ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். இதற்காக நான் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவின் பொருளாதார திட்ட அமைப்பான ‘பிமாண்டு’வுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனுடன் எங்கள் நிதிஆயோக் அமைப்பும் இணைந்து செயல்பட கேட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மலேசிய பிரதமர் நஜிப்ரசாக், பாதுகாப்பு துறையில் இருதரப்பும் இணைந்து தயாரிப்பது குறித்து கவனத்தில் கொள்ள இருநாடுகளும் விரும்புவதாக கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இருநாடுகளும் ஒரு பொதுவான நிலையை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் இருநாடுகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அதில், ‘அனைத்து விதமான தீவிரவாதங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்தை நிராகரித்து தீவிரவாதிகளை நீதிக்கு முன் நிறுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டு கொள்கிறோம். இந்தவிவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...