பொது மக்களும் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் பாஜக.,வினர்  ஈடுபட்டு உள்ளனர்.

தமிழக பாஜக அமைந்துள்ள தியாகராய நகர் சாலைகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, துணைத்தலைவர் வானதி சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டு சாலைகளை சுத்தம் செய்தனர்.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகுந்த சேதத்திற்கு ஆளாகி உள்ளது. பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறோம். இன்றைக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை நகர சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். ஏனென்றால் சென்னையில் தொற்றுநோய் பரவாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். பொது மக்களும் துப்புரவு பணிகளில் ஈடுபட வேண்டும்.

வடமாநிலம், தென்மாநிலம் என்று பிரித்து பார்த்து பிரதமர் நிவாரண நிதி ஒதுக்குவதில்லை. சேதத்தின் மதிப்பை அறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தின் வெள்ள சேதத்தை பற்றி அறிந்ததும் பிரதமர் உடனடியாக நிவாரண நிதியை அறிவித்தார். மேலும் மீட்பு நிவாரண நடவடிக்கைக்காக ராணுவம் உள்ளிட்ட முப்படைகளையும் அனுப்பிவைத்தார். வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.

மருத்துவ முகாம்கள் நடத்தவும், வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படவும் உத்தரவிட்டார். நிவாரண பணிகளில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே அரசியல் கட்சிகள் இதை அரசியல் ஆக்க கூடாது.

தற்போது ஏரிகள் திறப்பு குறித்து இருவேறு கருத்து நிலவி வருகிறது. இனி வருங்காலத்தில் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...