எங்களது ஒன்றரை வருட முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் சூழல் உருவாக்கபடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உறுதியளித்திருப்பதாக மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஒன்றரை ஆண்டுகளாக பிஜேபி எடுத்துவரும் முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணா மலைபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது:  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டை நடத்த அவசரசட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே போல் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களுக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜல்லிக் கட்டை நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது நடை பெற்று வரும் குளிர்கால கூட் டத் தொடரின் போதும் இது குறித்து அந்த துறையினுடைய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரிடம் வலியுறுத்திவந்தேன்.

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் கடிதம்குறித்து விவாதிப்பதற்காக அந்த துறையினுடைய அதிகாரிகளை அமைச்சர் ஜவ்டேகர் அழைத்திருந்தார். அந்த கூட்டத்திற்கு என்னையும் வருமாறு அழைத்தார். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டன. விரைவில் நல்லமுடிவு எட்டப்படும் என்றும் வரும்பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் சூழல் உருவாக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக் கட்டு போட்டி நடத்த, ஒன்றரை ஆண்டுகளாக பிஜேபி எடுத்துவரும் முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழக வெள்ளநிவாரண பணிகளில் பிஜேபி முன்னிலை பெற்றுள்ளது. நிவாரண பணிகளுக்கு தேவையான மேலும் நிதியுதவி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...