ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து-வரும் சி.பி.ஐ யின் முன்பு, ஏர்செல் நிறுவன முன்னாள்-அதிபர் சிவசங்கரன் வாக்குமூலம் தந்தார் . அதில் கடந்த 2006ம்-ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்துக்கு அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன், லைசென்சு தராமல் இழுத்தடித்ததாகவும்,
மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்க்கு ஏர்செல்லை விற்கும்-நிலைக்கு நெருக்கடி தந்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்தார் .
மேலும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு 14லைசென்சுகள் தரப்பட்டதாகவும் , அதற்கு பிரதிபலனாக, சன்-டைரக்ட் நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனம் சுமார் 500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய பாராளுமன்ற கூட்டு குழு தலைவர் பி.சி.சாக்கோ,
பாராளுமன்ற கூட்டுக்குழு 85சாட்சிகள் உள்ள பட்டியலை இறுதி-செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பபடும். அவர்களில், கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரைக்கும் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்த அருண்-ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்
ஏர்செல், நிறுவன ,சிவசங்கரன், தயாநிதி மாறன், தயாநிதி மாறனின், தயாநிதி மாறனை, தயாநிதி மாறனுக்கு,
தயாநிதி மாறனும், தயாநிதி அழகிரி, தயாநிதி மாறன்
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.