அம்பேத்காரிடம் எடுபடாத மத மாற்று பாட்சா

அம்பேத்காரிடம் மதம் மாற்றும் பாட்சா பலிக்கவில்லை
யவள என்ற ஊரில் 1935ம் ஆண்டு மே மாதம் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை விவாரித்துப் பேசினார். மேலும் தனக்கு மதம் மாறும் எண்ணம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உடனேயே கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தவர்கள் அவரைத் தங்கள் மதத்தில் சேருமாறு வேண்டினர்.

ஹைதராபாத் நிஜாம் அவரை முஸ்லிமாக மதம் மாறும்படி கோரினார். அதற்கு சன்மானமாக ரூபாய் ஏழு கோடி தருவதாகக் கூறினார்.

பாரதத்தில் அப்போது நடைபெற்று வந்ததோ கிறிஸ்தவ ஆட்சி, கிறிஸ்தவராக மதம் மாறினால் அரசாங்கத்தில் பல உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும் என்று கிறிஸ்தவ மதகுருமார்கள் அவருக்கு ஆசை காட்டினார்கள்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர் ஒருமுறை அவர் காந்தியடிகளைச் சந்தித்தார். அப்போது காந்தியடிகள் அவா¢டம் இது குறித்துப் பேசினார். காந்திஜியிடம் அம்பேத்கர் தான் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறப் போவதிரல்லையென்று வாக்கு கொடுத்தார். மேலும், "நம்நாட்டின் தேசியத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத விதத்தில் தான் நான் இணைவேன்" என்றும் உறுதி கூறினார். இது காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் புத்தமதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு தடவை மலேசியாவில் நடைபெற்ற பெளத்தமத மாநாட்டில் அவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பும் போது ஆழகிய புத்தர் சிலை ஒன்றும் வாங்கிக் கொண்டு வந்தார்.

நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார். அவருடைய ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்

தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என்றறெல்லாம் சொல்லி அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் அதைத் தெளிவாக்குகின்றன.

"புத்த மதம் பாரதீய ஹிந்து கலாச்சாரத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ, எவ்வித பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

One response to “அம்பேத்காரிடம் எடுபடாத மத மாற்று பாட்சா”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...