அம்பேத்காரிடம் எடுபடாத மத மாற்று பாட்சா

அம்பேத்காரிடம் மதம் மாற்றும் பாட்சா பலிக்கவில்லை
யவள என்ற ஊரில் 1935ம் ஆண்டு மே மாதம் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை விவாரித்துப் பேசினார். மேலும் தனக்கு மதம் மாறும் எண்ணம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உடனேயே கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தவர்கள் அவரைத் தங்கள் மதத்தில் சேருமாறு வேண்டினர்.

ஹைதராபாத் நிஜாம் அவரை முஸ்லிமாக மதம் மாறும்படி கோரினார். அதற்கு சன்மானமாக ரூபாய் ஏழு கோடி தருவதாகக் கூறினார்.

பாரதத்தில் அப்போது நடைபெற்று வந்ததோ கிறிஸ்தவ ஆட்சி, கிறிஸ்தவராக மதம் மாறினால் அரசாங்கத்தில் பல உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும் என்று கிறிஸ்தவ மதகுருமார்கள் அவருக்கு ஆசை காட்டினார்கள்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர் ஒருமுறை அவர் காந்தியடிகளைச் சந்தித்தார். அப்போது காந்தியடிகள் அவா¢டம் இது குறித்துப் பேசினார். காந்திஜியிடம் அம்பேத்கர் தான் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறப் போவதிரல்லையென்று வாக்கு கொடுத்தார். மேலும், "நம்நாட்டின் தேசியத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத விதத்தில் தான் நான் இணைவேன்" என்றும் உறுதி கூறினார். இது காந்திஜிக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் புத்தமதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒரு தடவை மலேசியாவில் நடைபெற்ற பெளத்தமத மாநாட்டில் அவர் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பும் போது ஆழகிய புத்தர் சிலை ஒன்றும் வாங்கிக் கொண்டு வந்தார்.

நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார். அவருடைய ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்

தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என்றறெல்லாம் சொல்லி அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் அதைத் தெளிவாக்குகின்றன.

"புத்த மதம் பாரதீய ஹிந்து கலாச்சாரத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ, எவ்வித பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

One response to “அம்பேத்காரிடம் எடுபடாத மத மாற்று பாட்சா”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...