மத்திய அரசு ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்தும் நோக்கத்திலேயே செயல்படுகிறது

தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில்  கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய பாஜக. தலைவர் அமித்ஷா வேண்டுகோளுக் கிணங்க, நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு பயன் தரும் அளவுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விவசாயபுரட்சியை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

விவசாய மக்களுக்கு பயன்தரும் இந்த காப்பீட்டுதிட்டம் மூலம் கடன்பெறலாம், விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன் படுத்தலாம். மேலும், குறைந்தவட்டி காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இவ்வளவு மகிழ்ச்சியான செய்தியை தமிழக பாஜக. தலைவராகிய நான் சோகமுடன் சொல்கிறேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து தமிழகமக்கள் மட்டுமல்லாது, தமிழக தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இடைக்காலதடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசால் அவசரசட்டம் இயற்ற முடியாது. ஆனால் அதேசமயத்தில், தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியும்.

மத்திய அரசு இதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கமுடியும் என்ற செய்தியை மின்னஞ்சல் மூலம் மத்திய தலைமை எங்களுக்கு அனுப்பிஇருக்கிறது. எனவே, அவசரசட்டம் இயற்றி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தலாம். அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.

கேள்வி:- ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருநாள் இருக்கும் போது எப்படி அவசரசட்டம் கொண்டு வர முடியும்? அதற்கு வழி முறைகள் இருக்கிறதா?

பதில்:- மத்திய அரசு எந்த ஒருமுடிவு எடுத்தாலும், அதை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் தெரிவிக்கும். எனவே அதற்கான வழிமுறைகள் கண்டிப்பாக இருக்கிறது. மத்திய அரசு அனைத்து முயற்சி களையும் செய்துவிட்டது.

கேள்வி:- அவசரசட்டம் இயற்ற மாநில அரசை கூறும் நீங்கள், ஏன் மத்திய அரசு அவசரசட்டம் இயற்றக்கூடாது?

பதில்:- சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும்போது, மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வந்தால், ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்துவதற்கு சிக்கல் வந்து விடும். மத்திய அரசு ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த அனுமதி வாங்கிதர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறது. அனைத்து கதவுகளும் தற்போது மூடப்பட்டுவிட்டன. தற்போது இருக்கும் ஒரேவழி மாநில அரசின் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...