பயிர் காப்பீட்டிலும் புதுமை… இனிதான் தெரியும், மோடியின் அருமை…

ஜியோஸ்பேஷியல் என்ற தொழில்நுட்பத்தின் வழியாக பாதிக்கபட்ட விவசாயநிலங்களை துல்லியமாக கணக்கிட்டு அதற்கு உண்டான இழப்பீடுகளைஉடனடியாக வழங்கும் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்தியஅரசு அறிமுகபடுத்தியுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான வேளாண் காப்பீட்டு நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிர் காப்பீடு, வழங்கும் ஒரு புதிய பயிர் காப்பீட்டு திட்டம் (NCIS)-ஐ கொண்டுவந்துள்ளது.இதன்படி கோதுமை 1.5%, நெல் 2.5%, எண்ணெய் வித்துக்கள் 2%, இதர தானியங்களுக்கு 2-2.5% வரை அதிகபட்ச பிரீமியமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

ஆனால் தற்போது விவசாயிகள், திருத்தப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (MNAIS) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம் (WBCIS) என்ற இரண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திட்டத் தொகையின் மீது அதிகபட்சமாக 15% பிரீமியம் செலுத்தி வருகின்றனர்.

அதனால் விவசாய நிலத்தின் பரப்பளவு, விளைவிக்கப்படும் பயிர்கள், பயிர் விளைவித்தலின் போது ஏற்படும் இடர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி அரசாங்கம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயி தன் வயலில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த பயிர், புயல் அல்லது மழை காரணமாக அழிய நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயிர் காப்பீட்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.
அதிக மழை அல்லது அதிக வறட்சி அல்லது பிற இயற்கை சீற்றங்களால் பயிர் சாகுபடி பாதித்து, மகசூல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தால், 25 சதவீத காப்பீட்டுத் தொகை முதலில் வழங்கப்படும்.

பிறகு விவசாய நிலத்தின் பரப்பளவை மிகத்துல்லியமாக ஆளில்லா விமானங்கள் செயற்கைகோள்கள் மூலமாக கணித்து விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய நிலத்தின் பரப்பளவை துல்லியமாக கணித்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு எஞ்சிய நிவாரணத் தொகையை எளிதாக எவ்வித பிரச்சனையும் இன்றி வேகமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...