சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து விருப்பமனு

தமிழக பாஜக முன்னாள் பொறுப்பாளரும், சிக்கிம் மாநில முன்னாள் கவர்னருமான வி.ராமராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பாஜக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகிறது. தேர்தல் எந்தநேரத்தில் வந்தாலும் எதிர்கொள்வோம். தற்போது நாங்கள் தேர்தல் நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தை 22-ந்தேதி கமலாலயத்தில் கூட்ட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தவும், வாக்கு சாவடி வாரியாக கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்தகூட்டங்கள் அடுத்த மாதம் நடைபெறும்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர் களிடம் இருந்து இன்னும் இரண்டுவாரத்தில் விருப்பமனு பெற இருக்கிறோம். பாஜக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கு பெறும் அளவிற்கு நாங்கள் வலுவாக இருக்கிறோம்.

கன்னியாகுமரியில் நாளை (இன்று) மத்திய மந்திரி நிதின் கட்காரி நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலுக்கு நாளை மறுநாள் வெங்கையாநாயுடு வருகிறார். இன்னும் பல மந்திரிகள் தமிழகம் வர இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல்மீது விதிக்கப்படும் கலால்வரியில் மத்திய அரசுக்கு 42 சதவீதம் கிடைக்கிறது. மாநில அரசுக்கு 21½ சதவீதம்வரை செல்கிறது. மீதி பணம்தான் மத்திய அரசுக்கு செல்கிறது. அந்த பணமும் தேசிய நெடுஞ்சாலைக்கு சாலை வசதியை மேம்படுத்ததான் பயன்படுத்தப்படுகிறது. பயிர் பாதுகாப்பு திட்டம் மக்கள் நலன் சார்ந்ததுதான்.

வருங்காலத்தில் சட்டசிக்கல்களை சரி செய்து ஜல்லிகட்டு நடத்த பாரதிய ஜனதா அரசு நடவடிக்கை எடுக்கும். இதைவைத்து அரசியல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...