தங்களை நிராகரித்த ஏழைமக்களை ஒரு குடும்பம் பழிவாங்க துடிக்கிறது


ஒரு குடும்பம் எதிர்மறை அரசிய லில் ஈடுபடுகிறது. 400 எம்.பி.க் களிலிருந்து 40 எம்.பி.க்களாக குறைந்துவிட்ட தேர்தல் தோல்விக் காக, மோடியின் பணியைச் செய்ய விடக்கூடாது என அக்குடும்பம் நினைக்கிறது. தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. அதற் கான சதி தொடர்ந்து நடக்கிறது.

காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற் காக வாக்களித்த ஏழைமக்களை பழிவாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். மோடி, பாஜக, மத்திய அரசை எதிர்த்தாலும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றம் செயல்படவேண்டும், அலுவல்கள் நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஒருகுடும்பம் மாநிலங்களவையை செயல்பட அனுமதிக்க வில்லை. இந்நாட்டு மக்கள் அக்குடும்பத்தைத் தோல்வியடையச் செய்ததால், வளர்ச்சியை தடுக்கின்றனர்.

இந்த அரசியலால் நாட்டுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. ஒரு குடும்பத்தின் இந்த அழிவுமனப் பான்மை அரசியலை மற்ற எதிர்க்கட்சிகள் விரும் பவில்லை. அசாமில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். மத்திய அரசுக்கு செவிசாய்க்கும் மாநில அரசு இருந்தா ல்தான் அங்கு நலத்திட்டங்கள் நிறைவேறும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய மேம்பாட்டுத் திட்டமாதிரி தேவை. அப்போதுதான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவுடன் இணைந்து இப்பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த வலுவை எட்டமுடியும்.

சமநிலை வாய்ந்த, அனைத்துத் துறை சார்ந்த வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், நாட்டின் கிழக்கு, மற்றும் வடகிழக்கு பிரதேசங்கள் பின்தங்கியி ருக்கின்றன. இதனால், நாட்டின் வளர்ச்சி முழுமையடைய வில்லை. தற்போது தொடங்கப்பட்டுள்ள இரு திட்டங்களும், 25 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தால், புதியதொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் வந்து, அனைத்து துறை சார்ந்த வளர்ச்சி இம்மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும்.

2-ம் தலைமுறையினர் இத்திட்டங்களால் பெரும் பயனடைந்திருப்பர். ஒட்டுமொத்த தலைமுறையும் பயன் பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது. தகவல் தொடர்பில் பின் தங்கியிருப்பது, இப்பகுதியின் வளர்ச்சியை பெருமளவு பாதித்துள்ளது.

அசாமில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...