தனிப் பெரும் கட்சியாக உருவாகி பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்

 மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா கூட்டணிகுறித்து தலைமையில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. மற்ற எந்தகட்சியும் கூட்டணி குறித்து முழுமையான அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை. பா.ஜ.க அரசியல் சூழ்நிலைகளை ஒட்டு மொத்தமாக ஆய்வுசெய்து தகுந்தநேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். போலி வாக்காளர்கள் லட்சக் கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனார். பல்வேறு பத்திரிக்கைகளில் ஒருவரே பல அடையாள அட்டைகள் வைத்துள்ளது குறித்து செய்திவந்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒரு போலியான வாக்காளர்கூட சேர்க்கப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல பலர் ஏற்கனவே உள்ள வாக்களிக்கும் இடத்தில் இருந்து முகவரி மாற்றப்பட்டு சிதறடிக்கப் பட்டுள்ளனர். அது சரி செய்யப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இது வரவேற்கப் படக்கூடிய விஷயம். இது வெறும் வாக்குறுதியாக இல்லாமல், உறுதியான நடவடிக்கை எடுக்ககூடிய வாக்குறுதியாக அமைய வேண்டும்.

கும்பகோணம் மகா மகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். அதை அரசுவிழாவாக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் நினைவில் வைத்துக்கொண்டு கொண்டு வருவது இந்தமகாமகம். வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

ஏற்கனவே நடந்த நிகழ்வையும், கடந்தகால அனுபவங்களையும், கருத்தில்கொண்டு ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படா வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம்செலுத்த வேண்டும். ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட வட மாநிலங்களில் நடந்த கும்பமேளாவில் ஒருவருக்கும் சிறுகாயம் கூட இல்லாமல் அந்தந்த மாநில அரசு நடத்தியுள்ளது.

அதை விட சிறப்பாக கும்பகோணம் மகாமகத்தை தமிழக அரசு நடத்தவேண்டும். எனவே, இதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவார் என நம்பிக்கை உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.,வில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நிலையாக கட்சியாக உருவெடுத்து வருகிறது. இனி வரும் காலங்களில் எந்தகூட்டணியும் இல்லாமல் தனிப் பெரும் கட்சியாக உருவாகி பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.