தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடு திருச்சிக்கு 3ம் இடம்

இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலை, மத்திய  அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டார். மைசூருக்கு முதல் இடம் கிடைத் துள்ளது. இதில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத் திலிருந்து இடம் பெற்ற ஒரேமாவட்டம் திருச்சி மட்டுமே. மதுரை 34-வது இடத்திலும், சென்னை-36-வது இடத்தையும் பெற்றுள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த நகரங்களின் விவரம்வருமாறு:- 1. மைசூர், 2. சண்டிகார், 3. திருச்சி, 4. டெல்லி, 5. விசாகப் பட்டிணம், 6. சூரத், 7. ராஜ்கோட், 8. கேங்டாக் (சிக்கிம்), 9. பிம்ப்ரி சிந்து வாத் (மகாராஷ்டிரா), 10. மும்பை. இந்தப் பட்டியலில், மதுரை 34-வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்து ள்ளது. இந்தியாவை 5 ஆண்டுகளில் தூய்மைப் படுத்தி ‘தூய்மையான இந்தியா’ என்னும் நிலையை ஏற்படுத்து வதற்கான திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி ”தூய்மை இந்தியா” திட்டம் துவக்கப் பட்டது. இந்த திட்டத்தின் தூதர்களாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர்கள் சல்மான்கான், கமல் ஹாசன், பிரியங்கா சோப்ரா தொழில் அதிபர் அனில் அம்பானி உட்பட மேலும் சிலபிரபலங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.இதன்தொடர்ச்சியாக, தூய்மையான நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...