திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் இரண்டாவது நாளாக இன்றும் பெறப்பட்டு வருகிறது. 

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விருப்பமனுக்களைப் பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி தங்களுடைய மோசமான நிலையை அறிந்து தான் அவசரப்பட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார். 

காங்கிரசை திமுக தொடர்ந்து கூட்டணியில் வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் தமிழகத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் கவனிக்கிறது. அரசுக்கு சார்பான காவல்துறை அதிகாரிகளை தேர்தல்பணிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. கட்சிசார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது
 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது துறைசார்ந்தே சென்னைக்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் இப்படியாக சென்னைக்கு வந்துசெல்வது இயல்பானதாகும். இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது. என்ற ராதாகிருஷ்ணன், எந்தகட்சியின் கூட்டணி நிலைப்பாட்டிற்காகவும் பாஜக காத்திருக்கவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...