விஜயகாந்த் குறித்து நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை யில்லை

தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.  தேர்தல்தேதி நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வருமாறு விஜய காந்துக்கு, தி.மு.க.-காங்கிரஸ், பாஜக., மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டை இது நாள் வரையில் தெரிவிக்காமல் மவுனம் காத்துவரும் விஜயகாந்த், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கூட்டணி குறித்து தற்போது தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
 
இந்நிலையில், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்த விரும் புவதாகவும், இதுகுறித்து பிரேமலதாவிடம் தொலைபேசியில் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாகவும், ஆங்கில இணையதளம் ஒன்றில் செய்திவெளியாகி இருந்தது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்து இருந்தார். 
 
இந்நிலையில், விஜயகாந்த் குறித்து நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை யில்லை என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  அளித்த பேட்டியில், “  விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என நான் கூறவில்லை. தேர்தல்கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் அவரது  குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பேசியதாக வெளியான தகவலை முற்றிலும் மறுக்கிறேன்.  குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றியும் எதுவும் பேசவில்லை. பேசியதாக வெளியான தகவல் கண்டனத்திற் குரியது.  தவறான செய்திவெளியிட்டது குறித்து பிரஸ்கவுன்சிலிடம் புகார் அளிக்கஉள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...