அகங்காரத்தைச் செதுக்குவோம்

ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு.

உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு

கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார்.

தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம்.

ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள்.

"உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர்.

பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்… நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் …

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...