இட ஒதுக்கீடு கொள்கையில் எந்தமாற்றமும் செய்யப்படாது

தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த ஆண்டு பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்

 

பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்கு எனக்கு வாய்ப்புகிடைத்துள்ளது. கடந்த 1956-ல் அம்பேத்கர் நம்மைவிட்டு மறைந்தார். 60 ஆண்டுகள் கழித்து இன்றுதான் அவருக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு வேளை இதை நான்தான் தொடங்கி வைக்கவேண்டும் என்பது விதியாக இருக்கலாம்.

 

இந்தகட்டிடம் டெல்லியின் அடையாள சின்னமாக விளங்கும். ஏன் உலகின் அடையாளமாகவும் விளங்கும். நம்மை பொருத்தவரை வரும் தலைமுறையினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும். இந்த நினைவிடத்தின் கட்டுமான பணியை வரும் 2018-ம் ஆண்டு மார்ச்மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி இதைதிறந்து வைப்பேன்.

 

அடல்பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போது, தலித், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு ரத்தாகி விடும் என சிலர் வதந்திபரப்பினர். அவர் 2 முறை பிரதமராக இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு ரத்தாகவில்லை. மத்தியில் இப்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், இட ஒதுக்கீடு ரத்தாகி விடும் என்ற பொய்யை சிலர் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

 

மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கெல்லாம் இடஒதுக்கீடு தொடர்ந்து அமலில் உள்ளது.

 

எனவே, இட ஒதுக்கீடு கொள்கையில் எந்தமாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாக சொல்கிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலை யில் உள்ள மக்களின் உரிமை. அதை யாரும் பறிக்கமுடியாது. நான் ஏற்கெனவே கூறியதுபோல, அம்பேத்கரே மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது.

 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் திடீரென விலகினார். ஏன் தெரியுமா? பெண்களுக்கு சமஉரிமை வழங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது, பெண்களுக்கு சம உரிமை கிடைக்கா விட்டால் நான் அமைச்சர வையில் நீடிக்க மாட்டேன் என்று கூறி விலகினார். இந்த வரலாறு மறக்கப்பட்டது.

 

தலித் மக்களுக்காக மட்டும் அம்பேத்கர் குரல்கொடுத்தார் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து சமூகத்திலும் பின்தங்கி யவர்களின் நலனுக்காக பாடுபட்டார். கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போல சர்வதேச தலைவராக விளங்கினார் அம்பேத்கர்.

 

கடந்ததேர்தலில் தோல்வி அடைந்ததை சிலரால் (காங்கிரஸ்) ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் எங்களை விரும்பவில்லை. எங்களை பார்க்கக்கூட அவர்கள் விரும்ப வில்லை. அதனால்தான் எங்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...