நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்கள் வெளியிடு

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நாட்டின் விடுதலைக்காக மிகப் பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ம் ஆண்டு அவர் விமானவிபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே அவர் விமானவிபத்துக்கு பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவரது மரணம்குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் அவரைப்பற்றிய உண்மை தகவல் என்ன? என்பதில் மர்மம் நீடிக்கிறது.

நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவுசெய்தது. அதன்படி, நேதாஜியின் 119-வது பிறந்த நாளான 23-1-2016 அன்று அவர் தொடர்பான 100 ரகசியகோப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அந்தகோப்புகளில் இதுவரை பொதுவெளியில் தெரியாமல் இருந்த பல அரியதகவல்கள் காணப்பட்டன.

இந்நிலையில் மத்திய மந்திரி மகேஷ்சர்மா இன்று நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டார். இந்த 50 ஆவணங்களில் 10 பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், 10 ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்தும், மீதமுள்ள 30 ஆவணங்கள் வெளியுறவு அமைச்சகத் திடமிருந்தும் பெறப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...