மறைமுக வரியாக ரூ. 7.09 லட்சம் கோடியை திரட்டி இலக்கை எட்டியது மத்திய அரசு

மத்திய அரசு மறைமுகவரியாக 7.04 லட்சம்கோடி திரட்ட கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது நிர்ணயம் செய்ததைவிட கூடுதலாக மறைமுகவரி கிடைத்திருப்பதாக உற்பத்தி மற்றும் சுங்கவரி ஆணையத்தின் தலைவர் நஜிப் ஷா தெரிவித்தார்.

திருத்திய கணிப்பின்படி ரூ. 7.04 லட்சம் கோடி திரட்ட மத்தியஅரசு நிர்யணம் செய்தது. இப்போது ரூ. 7.09 லட்சம் கோடி திரட்டப்பட்டு விட்டது என்று அவர் கூறினார். சுங்கவரி, உற்பத்திவரி மற்றும் சேவை வரி ஆகியவை சேர்ந்தது மறைமுகவரி ஆகும்.

சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்துவந்தது. இந்த சூழ்நிலையை பயன் படுத்தி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை உயர்த்தியது. மறைமுக வரி வசூல் உயரபெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி மிகவும் உதவியதாக ஷா கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் (2016-17) மறைமுகவரி வசூல் இலக்காக ரூ.7.80 லட்சம் கோடியை ரூபாயை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.

2015-16 நிதி ஆண்டில் நடப்புகணக்கு பற்றாக் குறை ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட 3.9 சதவீதத்துக்குள் இருக்கும் என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர் பார்த்த அளவுக்கு வரி வருமானம் இருக்கிறது. பங்கு விலக்கல் நிதியும் இருப்பதால் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த மார்ச் 31 வரை பங்குவிலக்கல் மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்பட்டிருக்கிறது.

நிதிப்பற்றாக் குறையில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. நடப்பு 2016-17ம் நிதி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட நிதிப்பற்றாக் குறை அளவான 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...