“சாகர்மாலா’ துறைமுக மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒருகோடி வேலை வாய்ப்பு

"சாகர்மாலா' துறைமுக மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அடுத்த 4, 5 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய தரை வழிப் போக்கு வரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


 நாட்டில் உள்ள 7,500 கி.மீ. கடலோர பாதைகள், 14,500 கி.மீ. நீர்வழிப்பாதைகள், சர்வதேச கடல்சார் வர்த்தக வழிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் "சாகர் மாலா' திட்டம் தொடர்பான உயர்நிலை குழுவின் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.


 அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 "சாகர்மாலா' திட்டத்தின்கீழ் கப்பல் மற்றும் துறைமுகத் துறையில்மட்டும் குறைந்தபட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில், 40 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மறைமுகமாகவும் உருவாக்கப்படும்.


மும்பையில், வரும் 14ம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்திய கடல்சார் உச்சிமாநாட்டில் மட்டும், இந்த துறையில் சுமார் ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும்.


 கடல் சார் துறையில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவ தற்காகவே, இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிடவுள்ள அறிவிப்புகளின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகத்துறை உந்து சக்தியாகச் செயல்பட முடியும். நாடுமுழுவதும் உள்ள 116 நதிகளை நீர்வழி பாதைகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.


 நீர்வழி பாதைகளை மேம்படுத்துவதன் மூலம், சாலை போக்கு வரத்து, ரயில்வே ஆகியவற்றைவிட நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் சரக்குகளை கொண்டுச்செல்லும் செலவுகள் குறையும்.


 மேலும், முக்கியத் துறைமுக நகரங்களில் பொலிவுறுநகரங்களை அமைப்பது, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹால்டியாவுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசிக்கும் இடையில் கங்கைநதியில் 1,620 கி.மீ. தூரத்திய நீர்வழித் தடத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். நாடுமுழுவதும் உள்ள 13 மாநிலங்களில் வசிக்கும் ஒருலட்சம் மீனவர்களின் நலன்களை காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...