மதசார்பற்றகுழு மற்றும் சகிப்பின்மையால் பிரதமர் மோடி பாதிக்கப் பட்டுள்ளார்

மதசார்பற்றகுழு மற்றும் சகிப்பின்மையால் பிரதமர் மோடி பாதிக்கப் பட்டுள்ளார் என்று மத்திய இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி அரசியல் மதசார்பற்ற குழு மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றினால் கடந்த 20 வருடங்களாக பாதிக்கப் பட்டுள்ளார். ஆனால், நாட்டில் அவர் மேற்கொண்டுவரும் வளர்ச்சிக்கான திட்டத்தினை அவை பாதிக்காது.

குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது, முன்னேற்றத்திற்கான முகம் ஆக இருந்தமோடி, பிரதமராக ஏழைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்ற த்திற்காக உழைத்து வருகிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, அதிகாரவர்க்கத்தில் இருந்த தரகர்களை ஒழித்துள்ளார்.  முன்னேற்றத்தினை அடிப்படையாககொண்டு அவர் செயல்பட்டு வருவதை ஊழல்செய்து நாட்டை கொள்ளையடித்தவர்களால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை என நக்வி கூறியுள்ளார்.

உண்மையினை மறைத்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி முன்னேற்ற த்திற்கான வழியில் தடையினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஆனால், நல்லநிர்வாகம் வழங்குதல் மற்றும் வளர்ச்சியை முடுக்கிவிடுதல் ஆகியவற்றில் அரசு முனைப்புடன் உள்ளது.  முன்னேற்றத்திற்கான விசயங்கள் தொடர்ந்து பாதிக்கப் படாமல் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...