நேரடி மானிய திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி மிச்சம்

மத்திய அரசின் நேரடி மானிய திட்டங்களால் ரூ.27 ஆயிரம் கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் தொடர் பாக டெல்லியில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பம், ஊரகவளர்ச்சி, பெட்ரோலிய துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.  சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதார் அடையாள அட்டை, நேரடி மானியத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நேரடி மானியத்திட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 30 கோடி பயனாளிகளுக்கு ரூ.61,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ.25,000 கோடியும் சமையல்காஸ் நேரடி மானிய திட்டத்தில் ரூ.21,000 கோடியும் அளிக்கப் பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டைகாரணமாக நாடுமுழுவதும் ஒருகோடியே 60 லட்சம் போலி ரேஷன் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.10,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதேபோல சமையல் காஸ் நேரடி மானியத்திட்டத்தால் 3.5 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.14,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 3,000 கோடி மிச்சமாகி உள்ளது. மத்திய அரசின் நேரடி மானியத்திட்டங்களால் ஒட்டுமொத்தமாக ரூ.27,000 கோடி சேமிக்கப்பட் டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, தகுதியுள்ள பயனாளிகள் பாதிக்கப்படக் கூடாது, எனவே நேரடி மானியத் திட்டங்களை அதிகபட்ச கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார். ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 71 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை தவிர ஏராளமான போலி தொண்டு அமைப்புகளும் இயங்குவதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. எனவே ஆதார் அட்டை எண் போன்று தொண்டு நிறுவனங்களும் தனி அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...