என் கட்சி தொண்டனுக்கு ஒன்று என்றால் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்

பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான டாக்டர்.தமிழிசை சவுந்தர ராஜன், தொண்டர்களை தாக்கினால் நான் சும்மாவிடமாட்டேன், என்று தெரிவித்துள்ளார். 

அண்ணா நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சுரேஷ்கர்ணா தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்த, பத்மநாபன் என்பவரை சிலர் தாக்கினார்கள். படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

திமுக. வேட்பாளர் தன சேகரனின் ஆதரவாளர் பசுபதிமகன் தென்னரசு என்பவர் பத்ம நாபனை தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சவுந்தர ராஜன், “எதை வேண்டுமென்றாலும் நான் பொறுத்துகொள்வேன். என் கட்சி தொண்டனுக்கு ஒன்று என்றால் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன். தொண்டரை தாக்கியவர்கள் மீது இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தும் இன்னும் தென்னரசு கைது செய்யப்பட வில்லை. அடிபட்ட பத்மநாபன் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு என்னிடம் அழுகிறார்கள். காவல் துறையும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...