அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்தே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன

பிரதமர் நரேந்திரமோடி தனிநபர் ஆட்சி நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, ஆலோசித்தபிறகே முக்கிய முடிவுகளை மோடி அரசு எடுப்பதாக கூறியுள்ளார்.

மோடி சுயபுகழ் பாடுவதாகவும், அதிபர் ஆட்சி முறையை கடைப்பிடிப் பதாகவும் மத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இந்தக்குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்:

அமைச்சரவைக் கூட்டங்களை நேரலையாக ஒளிபரப்பினால் எப்படியிருக்கும் என்று கூட நான் சில சமயம் யோசிப்பது உண்டு. ஏனெனில், அதைச் செய்தால் அமைச்சரவைக் கூட்டம் எந்தளவுக்கு ஜனநாயகமான முறையில் நடைபெறுகிறது என்பது மக்களுக்கு தெரியவரும்.

ஒவ்வொரு அமைச்சரும் தன்மனதில் தோன்றியதைப் பேசலாம். அவர்களது கருத்துகளை கூறலாம். அதில் பிரதமர் ஒருபோதும் குறுக்கிடமாட்டார். அனைவரின் கருத்துகளையும் அவர் கேட்டறிவார். அதன் பிறகுதான் அவரது கருத்தை வெளிப்படுத்துவார்.

ஜனநாயக முறையிலான கொள்கை உருவாக்க நடவடிக்கை களைத்தான் மோடி அரசு கையாளுகிறது. இங்கு அனைத்துமுக்கிய முடிவுகளுமே விவாதிக்கப் பட்டுத்தான் எடுக்கப்படுகின்றன.

பிரிவினைகிடையாது: மத்திய அரசுக்கோ அல்லது எங்கள் கட்சிக்கோ மக்களைப் பிளவு படுத்தும் நோக்கம் கிடையாது. ஒன்றுபட்ட இந்தியா தான் எங்கள் நோக்கம்.

ஒருதேசம், ஒரே மக்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். பிரதமர் மோடி மக்களை பாகுபடுத்திப் பார்த்ததுகிடையாது. 125 கோடி மக்களையும் அவர் ஒரேமாதிரியாகத் தான் பார்க்கிறார் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...