நரேந்திர மோடிக்கு மாற்றாக நாட்டில் வேறு எந்தத் தலைவர்களும் இல்லை

பிரதமர் நரேந்திரமோடிக்கு மாற்றாக நாட்டில் வேறு எந்தத்தலைவர்களும் இல்லை என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

ஹைதராபாதில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய அவரிடம், பாஜக அல்லாதகட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் பிகார் முதல்வரும், ஐ.ஜனதா தலைவருமான நிதீஷ்குமார், 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக உருவெடுப்பாரா? எனக் கேட்கப்பட்டதற்கு, பாஜகவுக்கு மாற்றாக புதியஅணியை ஏற்படுத்தும் முயற்சிகள் அனைத்தும், முரண்பாடுகளால் தோல்வியில் தான் முடிந்துள்ளன.

மோடிக்கு மாற்று வேறுயாரும் இல்லை. ஆனால், அப்படி ஒரு மாற்று சக்தி இருப்பதாக அவர்கள் பேசுகின்றனர். பிரதமராக வேண்டும் என்ற அபிலாஷையுடன் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், அந்தப்பதவி காலியில்லை. இரண்டாவது, இந்த கூட்டணிகள் அனைத்தும் முரண்பாடுகளை கொண்டவை ஆகும்.

மத்தியில் ஆளும் தேசியஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக நிதீஷ் குமாரால் முன்வைக்கப்பட்ட கூட்டாட்சிக் கூட்டணியானது, ஏற்கெனவே முயற்சிக்கப்பட்ட, பரிசோதனை நடத்தப்பட்ட, தோல்வி யடைந்த கூட்டணியாகும்.

முதலாவதாக, பிகாரில் தற்போது என்ன நடக்கிறது என்பது நமக்குத்தெரியும். அந்த மாநிலம் மீண்டும் காட்டாட்சியின் கீழ் தள்ளப்பட்டுவிட்டது. மாநிலத்தில் எங்குபார்த்தாலும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு, பிகாருக்கு வெளியே செல்வாக்குகிடையாது.

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி முன்பு ஆதிக்கம்செலுத்தியது. தற்போது அந்த இடத்தை பாஜக பிடித்துள்ளது. பாஜக தேசியவாதிகள் கொண்டகட்சி மட்டுமல்ல;  தற்போது உண்மையான தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியினர் தில்லிக்கு முழுமாநில அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தை எழுப்புகின்றனர். காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது ஏன் தில்லிக்கு முழுமாநில அந்தஸ்து அளிக்கவில்லை? என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...