இந்திராகாந்தி நாட்டின் பிரதமராக இருந்த போது கடந்த 25-6-1975 முதல் 21-3-1977 வரை ‘மிசா’ என்னும் நெருக்கடி நிலை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது. இந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை தடை செய்யப் பட்டிருந்தது. பத்திரிகை செய்திகள் அனைத்தும் தணிக்கைசெய்யப்பட்டன. அரசுக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் போலீசாரின் கண்களில் இருந்து தப்பித்து பிற மாநிலங்களில் தலைமறைவாக மாறு வேடத்தில் வாழ்ந்தனர். இந்த அவசர நிலை சட்டம் நாட்டின் மீது திணிக்கப்பட்ட 41-ம் ஆண்டு ‘கருப்புதினம்’ நேற்று டெல்லி உள்பட நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
கேரளமாநிலம் திருவனந்த புரத்தில் இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக. தலைவரும், பாராளுமன்ற மாநிலங் களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி பங்கேற்று பேசினார். அப்போது, கடந்த 2011-12 ஆண்டு வாக்கில் நாட்டில் அவசரநிலை சட்டத்தை அறிமுகப் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்து தீவிரவாதம் என்னும் புனைக் கதையை உருவாக்கி, அதை கட்டுப்படுத்தும் சாக்கில் நாட்டில் மீண்டும் அவசர நிலை சட்டத்தை அறிமுகப் படுத்த சோனியாகாந்தி முயன்றதாக தெரிவித்த சுப்பிரமணிய சாமி இது தொடர்பான விரிவான தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.