மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்

அடுத்த மாதம் தொடக்கத்தில் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறியகட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய மந்திரி சபையில் மொத்தம் 30 மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், மந்திரி சபையின் பலத்தை 42 ஆக உயர்த்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மந்திரிசபை விரிவாக்கம் இந்தமாத கடைசியில் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்தமாதம் (ஜூலை) முதல் வாரம் வரை மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிவைக்கப் பட்டிருப்பதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மந்திரி சபை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டதற்கு முதன்மை காரணம் பருவ மழை தாமதமே ஆகும். மந்திரி சபை விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு சந்திப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. பா.ஜனதா- சிவசேனா இடையே வார்த்தைப் போர் இருந்தாலும், சிவசேனாவுக்கு மந்திரி சபை விரிவாக்கத்தின் போது 2 இடங்கள் கூடுதலாக அளிப்பதில் எந்தவொரு மாற்றமு மில்லை.

இருந்தாலும், இந்தவிவகாரத்தில் சிவசேனா தலைமையிடம் இது வரை பேசவில்லை. இந்தவார இறுதியில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விரும்பினார். ஆனால், உத்தவ் தாக்கரே வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருப்பதும், மந்திரிசபை விரிவாக்கத்துக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் சுவாபிமானி சேத்காரி சங்கதானா, இந்திய குடியரசு கட்சி மற்றும் ராஷ்டிரசமாஜ் பக்ஷா உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் மந்திரி சபை விரிவாக்கத்தின் போது பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு வாய்ப்பாக அக்கட்சி தலைவர்கள் டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர்களை சமீபத்தில் சந்தித்துபேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...