அனைத்து மசோதாக்களையும் மத்திய அமைச்சரவை செயலகம் விரிவாகப் பரிசீலனை செய்ய உள்ளது

நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படவேண்டிய அனைத்து மசோதாக்களையும் மத்திய அமைச்சரவை செயலகம் விரிவாகப் பரிசீலனைசெய்ய உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் அமைச்சரவை செயலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் அறிமுகம்செய்ய வேண்டிய மசோதாக்களின் உத்தேசவரைவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்புமாறு அனைத்து அமைச்சகங் களையும் ஏற்கெனவே கோரியுள்ளோம்.

அவற்றை அமைச்சரவை செயலகம் விரிவாகப் பரிசீலனைசெய்ய ஏதுவாக மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாலோசனை உள்ளிட்ட வழக்கமான நடை முறைகளை முடித்த பின், உத்தேசவரைவுகளை அனுப்புமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சரவைச் செயலகம் அனுப்பிய மற்றொரு உத்தரவில், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாலோசனைகளை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு குறைந்த பட்சம் 25 புதிய மசோதாக்கள் வர உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்திருந்தார்.

மழைக் காலக் கூட்டத்தொடர் இம்மாதம் 18-ம் தேதி தொடங்கி, அடுத்தமாதம் (ஆகஸ்ட்) 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...