மாறுபட்ட கொள்கைகள் இருந்தபோதிலும் ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி

அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழ்ந்தார்.  ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்று 4 ஆண்டு முடிவடைந்ததை யொட்டி, ஜனாதிபதி மாளிகையில் 2வது அருங் காட்சியகம் தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி பேசியதாவது: அரசியலில் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் இருந்தாலும் பொதுவிஷயங்களில் வேறுபாடுகளை மறந்து, இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி பிரணாப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி அரசியல் எனக்கு புதியதாக இருந்தநிலையில், என்னை கைபிடித்து அழைத்து செல்லும் வழிகாட்டியாக விளங்கியவர் பிரணாப். திட்டங்களை செயல் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எனக்கு ஆசானாக விளங்குகிறார். ஒருசிலரே இதுபோன்ற தனிச்சிறப்புகளை பெற்றிருப்பார்கள்.

ஜனாதிபதியின் ஒப்புதலுடன் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, நீர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரணாப்பின் பங்கு மகத்தானது. வரலாறு, கலை, கற்பனைத் திறன், தொழில் நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த கூடமாக இந்த அருங் காட்சியகம் உள்ளது. வரலாற்றை அறிந்துகொள்ள இதை ஒவ்வொருவரும் பார்வையிடவேண்டும். வரலாறு மட்டுமின்றி தற்போதைய நிகழ்வுகளையும் இந்த அருங்காட்சி யகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...