மாறுபட்ட கொள்கைகள் இருந்தபோதிலும் ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி

அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழ்ந்தார்.  ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்று 4 ஆண்டு முடிவடைந்ததை யொட்டி, ஜனாதிபதி மாளிகையில் 2வது அருங் காட்சியகம் தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி பேசியதாவது: அரசியலில் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் இருந்தாலும் பொதுவிஷயங்களில் வேறுபாடுகளை மறந்து, இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி பிரணாப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி அரசியல் எனக்கு புதியதாக இருந்தநிலையில், என்னை கைபிடித்து அழைத்து செல்லும் வழிகாட்டியாக விளங்கியவர் பிரணாப். திட்டங்களை செயல் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எனக்கு ஆசானாக விளங்குகிறார். ஒருசிலரே இதுபோன்ற தனிச்சிறப்புகளை பெற்றிருப்பார்கள்.

ஜனாதிபதியின் ஒப்புதலுடன் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, நீர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரணாப்பின் பங்கு மகத்தானது. வரலாறு, கலை, கற்பனைத் திறன், தொழில் நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த கூடமாக இந்த அருங் காட்சியகம் உள்ளது. வரலாற்றை அறிந்துகொள்ள இதை ஒவ்வொருவரும் பார்வையிடவேண்டும். வரலாறு மட்டுமின்றி தற்போதைய நிகழ்வுகளையும் இந்த அருங்காட்சி யகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...