குஜராத் என்கவுன்டர் வழக்கு அமித் ஷாவிடம் மறுவிசாரணை தேவையில்லை

குஜராத்தில் தீவிரவாதி சொரபுதீன் ஷேக் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவிடம் மறுவிசாரணை நடத்தவேண்டிய எவ்வித தேவையும் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

2005 ஆம் ஆண்டு சொரபுதீன் ஷேக் குஜராத் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொரபு தீன்ஷேக் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ தொய்பா அமைப்புடன் தொடர்பு டையவர் என கூறப்பட்டது.அவர் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பிக்கும்போது பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. இதில் சொரபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர், வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சொரபுதீன் கூட்டாளி துளசி பிரஜாபதியும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

 

ஆனால், இது போலீசார் நடத்திய போலிஎன்கவுன்டர் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டது. 2012ல் என்கவுன்டர் வழக்கை கையில் எடுத்த சிபிஐ. சம்பவத்தின்போது குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவியில் இருந்த அமித்ஷா உள்ளிட்ட முக்கிய போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.

 

சிபிஐ. தனது விசாரணை அறிக்கை மும்பை கோர்ட்டில் தாக்கல்செய்தது. இதைதொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் அமித் ஷாவிற்கும் என்கவுன்டர் சம்பவத்திற்கும் தொடர்புஇல்லை என கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், அரசியல் காரணங்களுக்கு அமித்ஷா இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

 

ஹர்ஷ் மந்தேர் என்பவர் அமித் ஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். இதை விசாரித்த நீதிபதி அமித் ஷாவிற்கும் என்கவுண்டர் சம்பவத்திற்கும் தொடர்புஇருப்பதாக எவ்வித ஆதாரங்களும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட வில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...