சுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் சுதந்திர ஜோதி ஓட்டம் நடக்கிறது.
* 15-ந்தேதி- தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
* 16-ந்தேதி- பாரதியார் இல்லத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடங்கி வைக்கிறார்.
* 18-ந்தேதி- விருதுநகரில் காமராஜர் நினைவிடத்தில் மத்திய மந்திரி சதனாந்த கவுடா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
* 18-ந்தேதி- மகளிரணி சார்பில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
* 20-ந்தேதி- தூத்துக்குடியில் வ.உ.சி. சிதம்பரனார் நினைவிடத்தில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மற்ற தியாகிகளின் நினைவிடத்துக்கு பல மத்திய மந்திரிகள் வருகை தர உள்ளனர்.
சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் என்று உறுதி எடுத்து கொண்டு அனைவரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியதாகும்.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.