சவுதி அரேபியா; செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக அழைத்துவரப்படுவர்

சவுதி அரேபியாவில், வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள், செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக, விமானத்தில் அழைத்துவரப்படுவர்,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

 

சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை வீழ்ச்சியால், எண்ணெய்வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை, அந்தநாட்டு அரசு முடுக்கி விட்டு உள்ளது.


இத்தகைய அதிரடி மாற்றங்களால், ஆயிரக்கணக்கான இந்தியதொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் வேலைசெய்த நிறுவனங்களில் சம்பளபாக்கி இருப்பதால், அதை பெறும் வரை, அங்கேயே இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். நாட்கள் செல்லச்செல்ல, நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பதால், இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக தாயகம்திரும்ப வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது.

இதுதொடர்பாக, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங், சமீபத்தில், சவுதி அரேபியாசென்று திரும்பினார். அங்குள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சார்பில், உணவு,இருப்பிடவசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நிலுவை தொகை: இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாவது: தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுடன்,சவுதி அரேபியஅரசு பேச்சு நடத்திவருகிறது. பிரச்னை தீர்ந்ததும், தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும்.

வரும், செப்டம்பர், 25க்குள் இந்தியாதிரும்பும் தொழிலாளர்கள், எவ்வித கட்டணமுமின்றி, விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். அதற்குபின் இந்தியா வருவோர், அனைத்து செலவுகளையும், அவர்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...