சவுதி அரேபியாவில், வேலையின்றி தவிக்கும் இந்தியர்கள், செப்டம்பர், 25க்குள் நாடுதிரும்பினால், இலவசமாக, விமானத்தில் அழைத்துவரப்படுவர்,'' என, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை வீழ்ச்சியால், எண்ணெய்வளமிக்க நாடான சவுதி அரேபியாவில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை, அந்தநாட்டு அரசு முடுக்கி விட்டு உள்ளது.
இத்தகைய அதிரடி மாற்றங்களால், ஆயிரக்கணக்கான இந்தியதொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் வேலைசெய்த நிறுவனங்களில் சம்பளபாக்கி இருப்பதால், அதை பெறும் வரை, அங்கேயே இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். நாட்கள் செல்லச்செல்ல, நிலைமை மேலும் மோசமாகக்கூடும் என்பதால், இந்தியத் தொழிலாளர்கள் உடனடியாக தாயகம்திரும்ப வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது.
இதுதொடர்பாக, வெளியுறவு இணையமைச்சர், வி.கே.சிங், சமீபத்தில், சவுதி அரேபியாசென்று திரும்பினார். அங்குள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சார்பில், உணவு,இருப்பிடவசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது.
நிலுவை தொகை: இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாவது: தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுடன்,சவுதி அரேபியஅரசு பேச்சு நடத்திவருகிறது. பிரச்னை தீர்ந்ததும், தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை கிடைக்கும்.
வரும், செப்டம்பர், 25க்குள் இந்தியாதிரும்பும் தொழிலாளர்கள், எவ்வித கட்டணமுமின்றி, விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். அதற்குபின் இந்தியா வருவோர், அனைத்து செலவுகளையும், அவர்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.