வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை

உள்நாட்டில் விலைவீழ்ச்சியால் வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற பெரியவெங்காயம் வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சாம்பார் வெங்காயமும் ரூ.60-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது.

இதனால் நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் பெருத்தநஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.5-க்குதான் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்செலவு கூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்காரி வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்நாட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்கூறி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி, வர்த்தகத் துறை மற்றும் வேளாண்மைத் துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வெங்காயம் ஏற்று மதியை ஊக்கப் படுத்தும் வகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இந்தசலுகை வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் தேவைப்பட்டால் நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...