ஹேமச்சந்திர வித்யாபீடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

 சேர்ந்து படிக்க பணம் கிடையாது. அவரவர் தனிப்பட்ட தகுதி, தன்மைக்கேற்ப பாடங்கள். சான்றிதழும், அங்கீகாரமும் பண்டிதர்களிடமிருந்து, அரசிடமிருந்து இல்லை. ஆச்சார்யர் கல்வி, நிர்வாகம் அனைத்தையும் கவனிப்பவராக இருப்பார். நோக்கம், இப்போது இருக்கும் முட்டாள்தனமான மேற்கத்திய கல்வி முறையை அடியோடு அகற்றிவிட்டு பாரத கல்வியை புகுத்துவதே.

அரசு அங்கீகாரமே வேண்டாம் எங்களுக்கு. ஒன்று சபர்மதியிலும், இன்னொன்று சூரத்திலும், மூன்றாவது மும்பையிலும் உள்ளது. பாடங்கள் அவர்களே உருவாக்கியது. 7 வித்யா பாரதி கல்விக்கூடங்கள் இந்த முறையை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொண்டுள்ளன கடந்த 9 ஆண்டுகளில்.

‘சமர்த்த பாரத கேந்திரம்' என்பது கொள்கை. தம்பதிகளை ஆதி ஞான சாஸ்திரம் அறிய வைப்பது. அது, தெய்வ குணம் மிக்க பிள்ளைகள் பிறக்க உதவும். தவிர வீட்டில் பிள்ளை ஐந்து வரை இருக்கவேண்டும். அதுவரை, அவர்களுக்கு கல்வியை பெற்றோரே முதல் குருவாக இருந்து கற்பிக்க இந்த சாஸ்திர ஞானம் உதவும்.

வெவ்வேறு வயதில் இருக்கும் பிள்ளைகளுக்காக இதுவரை பல மொழிகளில் 100 புத்தகங்கள் வரை வெளிவந்துள்ளன. இந்த வித்யாபீடம் " இல்லற தர்மம், ஆதி ஞான சாஸ்திரம், அகர் சாஸ்திரம், இல்லறத்துக்கு ஏற்ற தன சாஸ்திரம், இல்லற தர்ம சாஸ்திரம் சார்ந்த தலைப்புகளை பாடமாக எடுத்துக்கொண்டுள்ளது. பல ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சமஸ்கிருதத்தில் இருந்த தர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதற்காகவே அன்று பாரத ரத்னா விருது வாங்கிய மேன்மை மிகு தரம்பால் அவர்களின் 10 தொகுப்புகள் பாடமாக உள்ளன. அதில், பாட திட்டமுறை எப்படி இருக்கவேண்டும், வியாபாரம் மற்றும் தொழில் முறை எப்படி இருக்கவேண்டும், கிராம ஜனநாயக முறை எப்படி இருக்கவேண்டும் போன்று பல விஷயங்கள் கல்வியாக போதிக்கப்படுகின்றன. இதை புரிந்து கொள்ளவே பாரத நாட்டு சிந்தனா முறையும் மனமும் வேண்டும்.

கற்றல், கற்பித்தல், மீண்டும் மீண்டும் படித்தல், ஆராய்தல், சிந்தித்தல், விவாதித்தல், மேற்ச்சொன்ன அனைத்தையும் சேர்ந்து செய்தல், இன்னின்னார்க்கு இன்னின்ன பாடங்கள் சரிப்பட்டு வரும் என்று தன்மையை ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற படிப்பை தருதல் இன்னும் போய்க்கொண்டே இருக்கிறது.

இது அத்தனையும் குருகுலம் முறைப்படி. குருகுலமும் அக்காலமுறைப்படி கட்டப்பட்டுள்ளது. நான்கு மூலைகளிலும் நாட்டு பசுக்களை அடக்கிய கோசாலை. பாரத நாட்டு வகையை சார்ந்த குதிரைகள், காளைகள் அதிக அளவில் உள்ளன.

மூன்று மாடி கட்டிடம், எல்லா சுவர்களிலும் உள்ளேயும் வெளியேயும் பசும்சாணி போட்டு மெழுகி வைத்துள்ளார்கள், உஷ்ணம் தெரியாமல் இருக்க. 80 ஆச்சார்யர்கள் 80 மாணவர்கள் இப்போதைக்கு.

60 ஆண்டுகளில் மொத்த கல்வி முறையையும் மாற்றுவது என்பது திட்டம். மக்களும் அரசும் ஒத்துழைத்தால் அவ்வளவு நாட்கள் ஆகாது.

ஐந்து கிரந்தங்களில் பாரதிய கல்வி முறையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்போகிறார்கள். இதை 2017 க்குள் முடிக்க திட்டம். இதில் வேத கணிதம், ரசாயன சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், வியாகரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், ஆயுர்வேதம், தனுர் வேதம் அடங்கும்.

இப்போதைக்கு கற்பிக்கும் மொழிகள் சமஸ்கிருதம், குஜராத்தி, ஹிந்தி. மாணவர்கள் 5 முதல் 17 வயது வரை. தேர்ச்சி மட்டுமே, தோல்வி கிடையாது. இப்போது இல்லையென்றால் அப்புறம் தேர்ச்சி அவ்வளவுதான்.

புத்தி, மனதுக்கு கல்வி (சாஸ்திர ஞானம்) உடலுக்கு கல்வி(குதிரை ஏற்றம், மாடு மேய்த்தல், மல்கம்பு ) ஆத்மாவுக்கு கல்வி (சாஸ்திரிய முறையான வாழ்க்கை)

இது தவிர வெவ்வேறு வகையான தலைப்புகளில் பெரும் அறிஞர்கள் வந்து அவ்வப்போது பாடம் எடுக்கிறார்கள். இவர்களது அறிவுத்திறமையை பார்த்து பிரமித்து போகிறார்கள்.

அரசாங்கம் மட்டும் பணம் தருகிறோம், எதிலும் தலையிட மாட்டோம், பணத்தை என்ன செய்தீர்கள் என்று தணிக்கை மட்டும் செய்கிறோம் என்று ஒதுங்கி இருந்தால் அடித்து நொறுக்கலாம். இந்த நாடு இழந்த பழம் பெருமையான ஞான வாழ்க்கையை மீண்டும் அடைந்து உலகுக்கு வழிகாட்டியாக விளங்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...