காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை

கோவை இந்துமுன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பீளமேடு விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் தற்போது நடைபெற்றுவரும் வேலைநிறுத்தம், பேருந்துகள் உடைப்பு  உள்ளிட்ட போராட்டங்கள் தேவை யற்றது. தமிழகத்திற்கு காவிரி நீர் முழுமையாக தற்போது கிடைக்கவில்லை. ஆனால், இதற்கேதற்போது கர்நாடகாவில்  போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இது, கண்டிக்கத் தக்கது.

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை. தமிழக முதல்வரை, கர்நாடகாவில் மிகமோசமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் பரவிவரும்  வன்முறையை, அம்மாநில முதல்வர் சித்தராமையா இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது தேசதுரோக சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக நலனுக்கு எதிராக, கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...