காங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார்

காங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை நிறைவேற்ற ராகுல் பாடுபடுகிறார் என பா,ஜனதா தலைவர் நிதின்கட்காரி பேசிஉள்ளார். 
 
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலுக்கான பணிகளில் பா.ஜனதா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
 
இதற்காக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேசிவருகிறார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி, சுதந்திரத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என மகாத்மா காந்தி விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் காரர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர். 
 
கோவா மாநிலத்தில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் காங்கிரசாரும் இதற்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் இருந்தே அகற்றப்படும். இதன்மூலம் காந்தியடிகளின் கனவு (காங்கிரசை கலைப்பது) கோவாவில் இருந்து நிறைவேறதொடங்கும், என்றார். மேலும் கோவா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக இணைவதற்கும் தீவிரமாக முயசித்து வருகின்றனர், இதுதொடர்பாக மனோகர் பாரிக்கர் மற்றும் பார்சேகர் முடிவு எடுப்பார்கள் என்றும் நிதின்கட்காரி கூறிஉள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...