வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப் படும் என மாநிலதேர்தல் ஆணையர் பெ.சீத்தா ராமன் அறிவித்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
 
தமிழகத்தில் 12 மாநகரா ட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்களின் பதவிக் காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாநிலதேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.
 
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல்தேதியை மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று அறிவித்தார். தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகியதேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும், இதற்கான தேர்தல் அறிவிக்கை 26ம் தேதி அதாவது திங்கள் கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். வேட்புமனு தாக்கலும் 26ம் தேதியான இன்று தொடங்குவதாக அறிவிக்கப் பட்டது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பித்தது. தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல்செய்யலாம். மனு தாக்கல்செய்ய கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை அக்டோபர் 6ம் தேதி பிற்பகல் 3 மணிவரை திரும்பப்பெறலாம். அன்று மாலை இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெறும். 2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21ம்தேதி காலை 8.30 மணி முதல் எண்ணப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல்கூட்டம் மற்றும் பதவியேற்பு அக்டோபர் 26ல் நடைபெறும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...