இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது

பாகிஸ்தானின் ஆக்கி ரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவத்தின் விமானப் படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப் பட்டன.
 
காஷ்மீர், ராஜஸ்தான் மாநில பாகிஸ்தான் எல்லையில் கூடுதல் ராணுவத் தினரை குவித்து, இந்தியா பதிலடி அளிக்காமல் தடுக்க பாகிஸ்தான் ராணுவத்திற்கு உத்தரவிடப் பட்டிருந்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தானின் முப்படைகளும் தயார் நிலையில்இருந்தன. பாகிஸ்தானின் ரேடார்கள் கண்காணித்தபடி இருந்தன. இத்தனை முன்னேற்பாடுகளுக்கு நடுவேயும், இந்தியராணுவம் விமானம் மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் பாரசூட்மூலம் குதித்து, தங்களது இலக்கான தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தி விட்டு, வெற்றிகரமாக எந்தபாதிப்பும் இன்றி தாய் நாட்டுக்கு திரும்பிவந்துள்ளது.
 
இந்த தாக்குதலில் விமானப் படையுடன், சிறப்பு அதிரடிப் படையினரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இலக்கை சரியாக தாக்கி அழித்து விட்டு, எந்தவித இழப்புமின்றி வீர நடைபோட்டு திரும்பி வந்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள். அதாவது, பாகிஸ்தானின் முப்படைகள் கண்களிலும் மண் தூவப் பட்டுள்ளது. பொக்ரானில் யாருக்கும் தெரியாமல் அணுகுண்டை சோதித்துபார்த்து அமெரிக்காவையே ஆட்டம் காணவைத்த, இந்தியாவுக்கு, இந்த தாக்குதல் ஒன்றும் பெரியவிஷயமாக தெரியவில்லை.
 
ஆனால் பாகிஸ்தானோ இப்போது அலற ஆரம்பித்துள்ளது. மியான்மரில் புகுந்து இந்தியராணுவம் தீவிரவாதிகளை அழித்ததைபோல பாகிஸ்தானில் தாக்குதலை நடத்தமுடியாது என்று பலரும் கருத்துகூறிவந்தனர். ஆனால், இந்திய ராணுவத்தின் சிறப்புபயிற்சி பெற்ற வீரர்கள் எந்த இலக்கையும் தாக்கி அழிக்கவல்லவர்கள். இன்று இந்திய ராணுவம் தனது தீரத்தை உலகத்திற்கு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...