பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர வாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாத முகாம்களுக்கு எதிராகவும் அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அந்நாட்டு ராணுவமும், அரசும் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதிமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்புகூட, பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். முசாபாராபாத், கோட்லி, சினாரி, கில்ஜித், டயமர் மற்றும் நீலும் பள்ளத்தாக்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள், தங்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்க அரசும் ராணுவமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதிகளால் நாங்கள் நரகத்தில் வாழ்வதுபோல் உள்ளது. பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்காத வரையிலும், பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அகற்றாதவரையிலும், அவர்களுக்கு புகலிடம்தராத வரையிலும், எங்களின் பிரச்னை தீராது எனக் கூறினார். டயமர், கில்ஜித், பாசின் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அகற்றவில்லை என்றால் நாங்களே அகற்ற வேண்டிய நிலை ஏறபடும் எனவும் கூறினர்.

மக்களின் போராட்டம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் தாக்குதலே நடக்கவில்லை என பொய்க் கூறும் பாகிஸ்தானின் நிலையை மேலும் பலவீனமாக்கியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...