நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு… நரேந்திரமோடி அதிரடி!

மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல்செய்யவுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள தேசிய நீர்கட்டமைப்பு மசோதாவில், ஆறு, நதிகள்பாயும் மாநிலங்கள், நீரை சுமூகமாக பங்கீட்டுகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒர நதி எந்தெந்த மாநிலங்கள் வழியாக பாய்கிறதோ, அந்த மாநிலங்கள் அனைத்திற்கும் அந்த நதி நீரில் சமஉரிமை உண்டு என்றும், அதனை பொதுசொத்தாக கருத வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் மேலாண் மையை நிர்வகிக்கவும், ஆற்று படுகைகளில் மேம்பாட்டிற்காகவும் தனியாக நதி நீர் படுகை ஆணையம் அமைக்கவும் மசோதா வழி செய்கிறது.

நீர்வரத்து, இருப்பு, பங்கீடு தொடர்பான தகவல்களை ஒளிவுமறைவின்றி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும். மேல் பகுதியில் உள்ள மாநிலம், நதிகள்பாயும் வழியில் ஏதாவதுதிட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், அதுபற்றி கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின், இந்த தேசியநீர் கட்டமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. காவிரிநீர் பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே பெரும்பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், புதியசட்டம் கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...