இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை செய்யவேண்டும்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் 3 தொகுதி இடைத்தேர்தலிலும் மாற்றத்தை கொண்டுவர மக்கள் வழிவகை செய்யவேண்டும்.

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படுவது உலக சாதனையாக பேசப்படுகிறது. ஆனால் அது நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அரசு அனுமதியுடன் கட்டப்பட்டது.

தமிழகத்தில் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதியோர்களுக்கு சிறப்புபாதுகாப்பு திட்டம் என்று கொண்டு வந்தார்கள். அது சரியாக நடைமுறைப் படுத்தவில்லை.

முதியோர்கள் பாதுகாப்புக்கு சிறப்புதொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. அதனை ஒரே நாளில் முதியோர்கள் படித்து தெரிந்துகொள்ள முடியாது. எனவே அந்த தொலைபேசி எண்ணை டி.வி., வானொலி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக முன்னேற்ற முயற்சி எடுத்துவருகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நாட்டை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

தொழில் துறை முதலீட்டில் தமிழகம் 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது விவசாயிகளுக்கு ஏற்ற சூழல் அல்ல. தொழில்துறை முன்னேற்றத்திற்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் ஏற்ற சூழ்நிலைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப் பட்டது. இந்த ஆண்டும் மழை பாதிப்பை தடுக்க அரசும், மாநகராட்சியும் தீவிரநடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டவன் நம்மை காப்பாற்றவில்லை. இனி ஆண்டவன்தான் நம்மை காப்பாற்றவேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு தி.மு.க.வும் காரணம்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தீவிரநடவடிக்கை எடுத்துள்ளது. பா.ஜனதா மத்தியில் பொறுப்பேற்ற பிறகு 4-ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் நலன்காக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...