நாட்டில் 500, 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி எடுத்துள்ள முடிவை, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றுள்ளார்.
பிஹார் மாநிலம் மேற்குசாம்பரான் மாவட்டத் தலைநகர் பெட்டியாவில் இருந்து முதல்வர் நிதிஷ் குமார் ‘நிஷ்சா யாத் திரை’யை நேற்று தொடங்கினார்.
முன்னதாக பாட்னா விமானநிலையத்தில் இருந்து பெட்டியா நகருக்கு புறப்படும் முன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறியதாவது:
உயர்மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால், நாட்டின் பொருளாதாரம் உயரும். பிரதமர் மோடி யின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திடீரென வாபஸ் பெற்றதால் தொடக்கத்தில் மக்களுக்கு சிலசிரமங்கள் ஏற்படலாம். ஆனால், எதிர்பார்த்த நல்ல பலனை தரும்.இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.