பிரதமர் நரேந்திர மோடி வரலாறு படைத்துவிட்டார்

கருப்புபணத்தை ஒழிக்க அடிதளமிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வரலாறு படைத்துவிட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பல்லியாவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியப்போது கருப்பு பண ஒழிப்பிற்கு வித்திட்டு, பிரதமர் புதிய வரலாறு படைத்துவிட்டார் என புகழாரம் சூட்டினார்.

இந்திய வரலாற்றில் நவம்பர் 8ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.மேலும் கருப்புபணத்தின் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றி அடைந்தது என்று தெரிவித்த அவர், இதனால் பொது மக்கள் சில நினங்களுக்கு சங்கடங்களை சந்திக்கநேரிடும் என்றும், நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

போலி நோட்களை புழக்கத்தில்விடும் தீவிரவாதிகளின் சதி திட்டம் தடுக்கப் பட்டது என்றும், இதன் மூலம் அவர்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் இந்தியஅரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...