கருப்புபணத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண அடி

பாஜக ஈரோடு தெற்குமாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொண்டு ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார். இந்ததிட்டத்திற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

செல்லாத ரூபாய் நோட்டுகளால் கோடிக்கணக்கில் கருப்புபணத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண அடியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கு திட்டத்தினால் கருப்புபணம் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளநோட்டு ஒழிக்க சிறந்த நடவடிக்கை என்று பொருளாதார வல்லுனர்கள் பாராட்டி உள்ளனர். காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்து குறைகளை கூறிவருகிறது. தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன.

குறிப்பாக பொள்ளாச்சி- கோவை, பழனிரோட்டில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறந்ததிட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்.

காவிரி பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தண்ணீர்திறக்க மறுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக. ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் திறக்க மறுத்தபோது தமிழக பா.ஜ.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்தோம்.

ஆனால் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்துவருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழுமையாக எடுத்துவருகிறது. எனவே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் நிரந்தரமாககிடைக்கும் இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...