தமிழகம், ஆந்திரத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வர்தாபுயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், ஆந்திரத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மஹரிஷி, தேசியபேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 268 பேரை உள்ளடக்கிய 8 மீட்புக் குழுவினர், 29 படகுகளுடன் தமிழகத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சென்னையில் மட்டும் 108 பேர் களத்தில் உள்ளனர். புயலால் சாலைகளில விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரத்தில் 205 பேர் அடங்கிய 6 குழுக்கள் 20 படகுகளுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்தும், மத்திய, மாநில அமைப்புகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங் திருப்தி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...