சேவை மற்றும் கருணைக்கான நாள் கிறிஸ்துமஸ்

கிறிஸ்துவ மக்கள் அனைவர்க்கும் பிரதமர் மோடி கிறிஸ்துவதின வாழ்த்து தெரிவித்துள்ளார். சேவை மற்றும் கருணைக்கான நாள் இது என்றும் மன் கிபாத் "மனதில்குரல்" நிகழ்ச்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


மாதந்தோறும் வானொலியில் மனதின்குரல் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றிய வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் ஆற்றிய உரையில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் விதமாக நுகர்வோருக்கான 'லக்கி கிரஹக்யோஜனா' என்ற திட்டமும் சிறு வணிகர்களுக்கான 'டிகி தன் வியாபார் யோஜனா' என்ற 2 புதிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இந்ததிட்டங்கள் இன்று முதலே அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


பணமில்லா மின்னணு பரிவர்த்தனை தற்போது 300 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாகவும், மின்னணு பரிவர்த்தனைக்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துவருகிறது. மின்னணு பணப்பரி வர்த்தனையை ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அசாம் மாநில அரசை பாராட்டுகிறேன் என்ற மோடி, அடுத்த 100 நாட்களில் 2 புதிய திட்டங்களை செயல்படுத்த போவதாக மோடி தெரிவித்தார்.


ஜன்தன் வங்கி கணக்கு மூலம் 20 கோடி பேர் ரூபேகார்டு வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் தொடர்ந்து நடத்துவார்கள் என்றும், வருமான வரித் துறையின் சோதனை இத்துடன் முடியாது என்றும் கூறினார்.

கறுப்புப் பணம் முதலைகள் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழி தேடி கொண்டிருக்கிறார்கள் என்றும் தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு எடுக்க தயங்காது, அந்த நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக் கின்றனர் என்றும் மோடி கூறினார்.


இன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட மோடி, இரக்க உணர்வையும், சேவை மனப்பான்மையையும் குறிக்கும் நாள் கிறிஸ்துமஸ் என்று கூறினார்.
இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பேய் பிறந்தநாள் என்பதால் அவருக்கும் தனது பிறந்த தின வாழ்த்துக்களை வானொலி உரையில் தெரிவித்துக்கொண்ட மோடி, நாட்டின் வளர்ச்சியில் வாஜ்பாயின் பங்களிப்பை தேசம் என்றைக்கும் மறக்காது என்று புகழாரம்சூட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...