ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினர், பிரதமரைச் சந்திக்கவிரும்பினால், அதற்கு தாம் தொடர்முயற்சி மேற்கொள்வேன் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தவலியுறுத்தி சென்னை மெரினாவில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்ட குழுவினரை சென்னை கமலாலயத்தில் சந்தித்துப் பேசினார் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
இந்தசந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்பினால், அதற்கான முயற்சியை தாம் தொடர்ந்து மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே-வை தாமும், தமிழக பாஜக குழுவினரும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானதுதான் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.