இந்தியா வளமான பொருளாதார கட்டமைப்புக்குள் வரவேண்டுமானால் கருப்புபணத்தை ஒழிக்க வேண்டும்

உயர் ரூபாய் நோட்டு தடைசெய்துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதகபாதகம் குறித்த கருத்தரங்கம் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.   இதில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது:

 இந்தியா வளமான பொருளாதார கட்டமைப்புக்குள் வரவேண்டுமானால் கருப்புபணத்தை ஒழிக்க வேண்டும், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை தடுக்கவேண்டும், பலவழிகளில் முறைகேடாக சம்பாதித்து வீட்டில் மூட்டை மூட்டையாக அடுக்கிவைத்துள்ள ஊழல் பணம் வெளியில் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை பிரதமர் நரேந்திரமோடி உறுதியாக நம்பினார். அதற்காக சிலநாட்கள் நாட்டு மக்களுக்கு  உயர் கரன்சிநோட்டு ரத்து என்ற கசப்பான மருந்தை கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதிகொடுத்தார்.   மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர, ஒட்டுமொத்த தேசம் கைகூப்பி ஏற்றுகொண்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் 24 மணிநேரத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்தியா மட்டுமில்லாமல், உலகில் பலநாடுகளை சேர்ந்தவர்கள் தைரியமாக தொழில்முதலீடு செய்கிறார்கள். அவர்கள் கேட்கும் சலுகைகள் தங்கு, தடையின்றி வழங்கப் படுகிறது. எந்த கோப்புகளும் கமிஷனுக்காக அதிகாரிகளின் மேஜையில் காத்திருப்பதில்லை. தொழில்வளர்ச்சி மட்டுமில்லாமல், தகவல், உயிரி தொழில்நுட்பம், உள்நாட்டு பாதுகாப்பு, பக்கத்து நாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றையும் சீராககவனித்து வருகிறார்.  மொத்தத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்தியாவை பொருளாதார ரீதியாக சர்வதேசளவில் வேகமாக வளர்ச்சியின் பாதையை நோக்கி பயணிக்கசெய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...