எம்எல்ஏ.,க்களை அடைத்து வைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்

''எம்எல்ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்திருப்பது தமிழகத்திற்கு கேவலம்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

இது குறித்து மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது எழுந்துள்ள பிரச்னையில், கவர்னர் வித்யாசாகர்ராவ் பொறுமையாக செயல்பட்டார்; இதைவிட வேறுயாரும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது. ஐம்பது ஆண்டுகளாக, திமுக.,வும், அதிமுக.,வும் தமிழகத்தை ஆட்சிசெய்து அழித்துவிட்டன. புதியதேடலில் மக்கள் உள்ளனர்.
 

அ.தி.மு.க.,வில், முதல்வராக யார்வருவார் என தெரியாது. யார் வந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து அதுதான். எம்.எல்.ஏ.,க்களை ஓரிடத்தில் அடைத்துவைத்தது தமிழகத்திற்கு கேவலம். சட்டத்தை இயற்றக்கூடிய, எம்.எல்.ஏ.,க்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழகத்தில் மீதமுள்ள நான்கரை ஆண்டுகாலமும் ஆட்சி தொடரவேண்டும். அந்த கட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற போட்டி நடக்கிறது. மக்கள், அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...