உ.பி., சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும்

""உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் வகையில் அமையும்'' என பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, கோரக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பது பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டு விடும் (நேரு குடும்பத்தை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). ஆனால், பாஜகவில் அத்தகுநிலை இல்லை.


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவானது பரம்பரை அரசியலுக்கும், ஜாதிரீதியிலான அரசியலுக்கும் முடிவுகட்டுவதாக அமையும்.உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது கோவா, உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கடைசி நேரத்தில்தான் கூட்டணி அமைத்தன. பொதுவாக, இரண்டு அரசியல் கட்சிகளிடையே கொள்கைகளின் அடிப்படையில்தான் கூட்டணி அமையும்.


ஆனால் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அமைத்துள்ளது கொள்கையற்ற கூட்டணியாகும். இது, இரு ஊழல் குடும்பங்களுக்கு இடையே அமைந்த கூட்டணிபோல் தெரிகிறது.


சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால், அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டார். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் – ஒழுங்குநிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குற்றங்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.


அகிலேஷ் யாதவின் ஆட்சியில் ஏழை எளியமக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர் என்றார் அமித் ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...