பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி

 பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போதைய சட்டமன்ற  தேர்தலைச் சந்தித்தது..

மாநில சட்டசபையின் மொத்தமுள்ள 403 தொகுதியில் போட்டியிட்ட பாஜக அதிக இடங்களைப்பிடிக்கும் எனவும், தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும் இருவகையான தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம்  வெளியாயின.

ஆனால்  இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய திலிருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.காலை 103.0 மணி நிலவரப்படி தெளிவாக முன்னணிநிலவரம் தெரிந்துள்ள 379 தொகுதிகளில் 274 தொகுதிகளில் பாஜக முன்னிலைபெற்றுள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி 75 இடங்களில் முன்னணியில் உள்ளது. மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியானது 30 இடங்களில் மட்டுமே முன்னணி பெற்றுள்ளது. இதன் காரணமாக பதினைந்து வருட இடைவேளைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலையிலேயே அவர்கள் பாஜக அலுவலகங்களில் கூடி இனிப்புகள் வழங்கத்தொடங்கினர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. இது மிகப் பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...