கமலஹாசன் அச்சத்தின் முழு உருவமாக தெரிகிறார்

கமலஹாசன் புதிய தலைமுறையில் கொடுத்திருந்த நேர்கானலை சற்று முன் தான் பார்த்தேன். வழக்கம் போல் தெளிவாக பேசாமல் பசப்பும் கருத்துக்கள். தவறுகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டாமல் என்ன சொல்ல வருகிறார் என்பதையே வெளிக்காட்டாமல் பூசி மெழுகும் பேச்சு. திராவிடம் அழியாது எனும் அவரது கருத்து வேடிக்கையாக இருந்தது. திராவிடம் என்பதற்கு அவர் பூகோள ரீதியான விளக்கம் தருகிறார். அதாவது அது திவ்ய பிரபந்தத்தில் இருக்கிறதாம், தமிழ்தாய் வாழ்த்தில் இருக்கிறதாம், ஆந்திரா, கர்நாடகா, என மாநிலங்களை உள்ளடக்கியதாம். திராவிடத்திற்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறதாம். அது எப்படிப்பட்ட ஒரு அடையாளம் என்பதில் அவருக்கு மிதமிஞ்சிய குழப்பம் இருப்பதை பார்க்க முடிகிறது. திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் பாதுகாப்பு, தற்போது கைநழுவிப் போகிறதோ எனும் அச்சம் தெரிகிறது.

தெளிவில்லாத, முற்றிலும் குழம்பியுள்ள அவரின் பேச்சிற்கு இடையில் "பசுமாட்டை படகில் ஏற்றி சென்றிருந்தால் இலங்கை படையினர் சுட்டிருக்க மாட்டார்கள்" எனும் நக்கலும், மகாபாரதத்தில் திரௌபதியை வைத்து சூதாடும் ஒரு புத்தகத்தைதான் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் எனும் ஏளனமும் காண முடிந்தது. சுருக்கமாக ஈவேராவின் எச்சமாக இருந்த ஒரு தலைமுறை எப்படி இப்படிப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வார்களோ அந்த புளித்து போன வெளிப்பாடு தெரிந்தது.

மொத்தத்தில் கமலஹாசன் அச்சத்தின் முழு உருவமாக தெரிகிறார். 1960-70 களில் திராவிட ரௌடிகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட பிராமண சமூகத்தினரில் ஒரு சிலர், தங்களை வீரர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள பூனூலை களைந்தும், அசைவம் உண்டும், பகுத்தறிவு பேசியும் செயற்கையான ஒரு மாயையில் திரிந்ததாக சொல்வார்கள். அப்படிப்பட்ட கடைந்தெடுத்த‌ பேடிகளின் ஒரு அற்புதமான உதாரணம் கமலஹாசன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...